உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

.மங்களூரில் விதைகிராம திட்டத்தில் தரமான விதை உற்பத்தி பயிற்சி

திட்டக்குடி :

                  மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தில் தரமான விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.

                 மங்களூர் வட்டாரத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் நெல், சிறுதானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் தரமான விதைகளை, விவசாயிகளே உற்பத்தி செய்திட பதினேழு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது.

               ராமநத்தம் மற்றும் கல்லூர் கிராமங்களில் அதனை சுற்றியுள்ள தேர்வு செய்யப்பட்ட ஆர்வமுள்ள விவசாயிகள் 100 பேருக்கு ஒரு நாள் பயிற்சி, மங்களூர் வேளாண் அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முருகன் பயிற்சி அளித்தனர். துணை வேளாண் அலுவலர் டென்சிங் அஸோஸ்பைரில் லம், ரைஸோபியம் ஆகிய உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான கொல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்வதன் அவசியத்தை விளக்கினார். பயிற்சி ஏற்பாட்டினை உதவி வேளாண் அலுவலர்கள் குணசேகரன், திருமுருகன், பிரகாஷ், ரமேஷ் மற்றும் சின்னதுரை செய்தனர். உதவி விதை அலுவலர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior