உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

சாலை பாதுகாப்பு வாரவிழா

பண்ருட்டி :

               பண்ருட்டியில் சாலைபாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு  போக்குவரத்து துறை சார்பில் வாகனங்களில் பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பட்டது.
 
                        பண்ருட்டி கும்பகோணம் சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுதாகர், வேலுமணி, கோகுலகிருஷ்ணன் வாகன தணிக்கை மேற்கொண் டனர். அப்போது லாரிகளில் அதிக லோடு ஏற்றி செல்கிறதா, ஆட்கள் ஏற்றி செல்கின்றனரா என சோதனை செய்தனர். அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அகற்றி, டிரைவர்களை எச்சரித்தனர்.  பிரதிபலிப்பான்கள் இல்லாத வாகனங்களில் பிரதிபலிப்பான்கள் ஒட்டினர். வாகனத்தின் வேகம் மற்றும் அதிக புகைவெளியிடும் வாகனங்கள் குறித்து சோதனை செய்தனர். சாலை பாதுகாப்பு குறித்த  துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior