உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

 சேத்தியாத்தோப்பு :

           சேத்தியாத்தோப்பை அடுத்த வண்டுராயன் பட்டு கிராமத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை ஆர்.டி.ஓ. துவக்கி வைத்தார்.

            நிகழ்ச்சிக்கு புவனகிரி ஒன்றிய சேர்மன் தனலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் காமராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெயராமன், ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ. பழனிசாமி வரவேற்றார். ஆர். டி.ஓ., ராமலிங்கள் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அமுதராணி, ஊராட்சி துணைத் தலைவர் சாரங்கபாணி, தலைமையாசிரியர் சுந்தரம் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

எறும்பூர்:

           ஒன்றிய கவுன்சிலர் ராஜி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் இளையபெருமாள் முன்னிலை வகித் தார். புவனகிரி ஒன்றிய சேர்மன் தனலட்சுமி கலைவாணன் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். ஊராட்சி துணைத்தலைவர் குமார் நன்றி கூறினார்.

நல்லூர்: 

           வேளாண்மைக்குழு தலைவர் பாவாடை கோவிந்தசாமி, நகர் ஊராட்சி தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன் சிலர் சக்திவிநாயகம் வரவேற்றார். நல்லூர் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா தலைமை தாங்கி, ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். நகர் ஊராட்சியில் நடந்த விழாவில் ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமையில் மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். விழாவில் ஒன்றிய துணை செயலாளர் கருப்புசாமி, கிளை செயலாளர்கள் குணா, அன்பழகன், மணிகண்டன், அன்புக்குமரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

விருத்தாசலம்:

            ஆலடி ரோடு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன்,வாசு சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior