உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

உலக நன்மைக்காக வேள்வி

சிதம்பரம் :

            புவனகிரி ஆதிபராசக்தி மன்றத்தில் சிறப்பு வேள்வி நடந்தது.  புவனகிரி ஆதிபராசக்தி மன்றத்தில் புத் தாண்டை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், 12 கலசம்,12 விளக்குகள் கொண்ட வேள்வியை வட்டத்தலைவர் பார்த்தசாரதி தலைமையில் அன்பழகன் துவக்கி வைத்தார்.

                 1008 பேருக்கு சக்திமாலை அணிதல் நிகழ்ச்சியை ஒன்றிய தலைவர் ராஜகோபால் முன்னிலையில் வேள்வி குழு தலைவி மனோகரி துவக்கி வைத் தார். 108 ஏழைகளுக்கு ஆடைதானத்தை மன்ற தலைவர் சஞ்சிவிராயர், மன்ற காப்பாளர் சுப்ரமணியன் வழங்கினர். 1008 பேருக்கு அன்னதானத்தை சுந்தரேசன், கண் ணன் முன்னிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலகுமார் துவக்கி வைத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior