உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

நரியன் ஓடை மேம்பாலம் விரைவில் திறக்கப்படுமா?

நடுவீரப்பட்டு :

              நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தை பொங்கலுக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடையில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி 23ம் தேதி துவங்கியது. 10 மாதங்களில் பாலம் கட்டி முடித்திருக்க வேண்டும். ஆனாலும், இன்னும் சிறு, சிறு பணிகள் முடிவடையாமல் உள்ளது. வரும் 16ம் தேதி சி.என்.பாளையத்தில் உள்ள புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வருவார்கள். இவர்கள் நடுவீரப்பட்டிலிருந்து சி.என்.பாளையம் செல்ல சரியான வழியில்லாததால் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. ஆகையால் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து பாலத்தை பொங்கலுக்குள் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் குறைந்தபட்சம்  பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையிலாவது வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior