உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

ஒரே தவணையில் நிலுவை தொகை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

திட்டக்குடி :

           நிலவைத் தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

              திட்டக்குடி வட்ட ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். செயலாளர் முருகன் வரவேற்றார். செயலாளர் பழனிச்சாமி, செயல் தலைவர் பழனியாண்டி, கிருஷ் ணமூர்த்தி, லட்சுமணன், கோவிந்தன் பேசினர்.

                 சங்கத்தில் காலியாக உள்ள துணைத்தலைவர், புரவலர், ஆலோசகர் மற்றும் செயல் தலைவர் பொறுப்புகளுக்கு  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் 1.1.2006க்கு பின் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கிய ஓய்வூதிய பலன் விரைவில் வழங்க வேண்டும், நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இளங்கோவன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior