உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலியால் சாவு

கடலூர் : 

               கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலியால் இறந்தார்.
 
               புதுச்சேரி தட்டாஞ்சாவடி ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் சுசில்குமார் (40). இவர் மனை வியை கொலை செய்த வழக்கில் ஆரோவில் போலீசாரால் வழக்குப் பதிந்து, திண்டிவனம் கோர்ட்டில் கடந்த ஜூலை 28ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு, கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். நேற்று அதிகாலை சுசில்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் சிறைத் துறை டாக்டர் பரிசோதித்து, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனைக்கு வரும் வழியில் சுசில்குமார் இறந்தார். ஏற்கனவே இவருக்கு 2 முறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக சிறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுகுறித்து, கடலூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ் விசாரணை நடத்தினார். மேலும், கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior