உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

விளையாட்டு போட்டிகளில் வெற்றி : பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு

நெய்வேலி : 

               தேசிய மற்றும் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நெய்வேலி பள்ளி மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.
 
                நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களான அகில், சந்தீப் நீச்சல் போட்டியிலும்,  மாணவி ஸ்ரீஜா சேஷாத் திரி சதுரங்க போட்டியிலும் தேசிய அளவிலும், கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான மாரத்தான்  போட்டியில் மாணவி ஸ்ரீதேவி இரண்டாம் இடத்தில்  வெற்றி பெற்றனர். இவர்களை கடலூரில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் பாராட்டி  ரொக் கப்பரிசு வழங்கினார். இதே பள்ளி மாணவர்கள் சஜன் பிரகாஷ் நீச்சல் போட்டியிலும், ராஜகுரு மற்றும் எட்வின் கால்பந்து போட்டியிலும், அக்ஷை மற்றும் நிக்கி புனாட்சா டென்னிஸ் போட்டியிலும் வெற்றி பெற்றதற்காக நெய்வேலி பாரதி ஸ்டேடியத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி பரிசு வழங்கி பாராட்டினார். பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் மற்றும் நிர்வாக குழுவினர் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior