உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

பெற்றோர்களின் உழைப்பை உணர்ந்து படியுங்கள் : பேராசிரியர் கண்ணன் அறிவுரை

கிள்ளை : 

              பெற்றோர்களின் உழைப்பு உணர்ந்து படிக்க வேண்டும் என பேராசிரியர் கண்ணன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
 
           சிதம்பரம் அடுத்த கிள்ளையில் அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்காக  மதுரை ஏக்தா நம்பிக்கை மையம் சார்பில் நடந்த தன்னம் பிக்கை முகாமில் மதுரை சமூகவியல் கல்லூரி பேராசிரியர் கண்ணன் பேசியதாவது: போட்டித் தேர்வுக்கும், பொதுத் தேர்வுக்கும் வித்தியாசம் உணர்ந்து படிக்க வேண்டும். தற்போது நீங்கள் சந்திக்க இருப்பது பொதுத்தேர்வு. போட்டித் தேர்வில் குறிப்பிட்ட சிலர் தான் வெற்றி பெறுவார் கள். ஆனால் பொதுத் தேர் வில் பங்கேற்கும் அனைவரும் வெற்றி பெறலாம். உங்கள் எதிர்காலத்தை தீர் மானிப்பது எஸ்.எஸ். எல்.சி., மதிப்பெண் தான். அடுத்து நீங்கள் என்ன படிக்க திட்டமிட்டுள் ளீர்கள் என்பதை உணர்ந்து படிக்க வேண்டும். படித்த அனைவருக்கும் அரசுப் பணி கிடைப்பது கடினம். தற்போது தனியார் துறையில் வாய்ப்புத் தேடிச் செல்லும் நிலை உள்ளது. அதற்கு கூடுதல் மதிப் பெண் மட்டும்தான் வழிகாட்டும். நகரங்களில் படிக்கும் மாணவர்கள் மதிப்பெண் எடுப்பது சுலபமாக இருக்கும். ஆனால் கிராமத்தில் படிக்கும் நீங்கள் வாழ்க்கையை உணர வேண்டும், பெற்றோர்களின் உழைப்பை உணர்ந்து படிக்க வேண்டும். மனப்பாடம் செய்யாமல் பாடப் பொருளை உணர்ந்து படிக்க வேண்டும். தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பன்நாட்டு நிறுவனங் கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது இத் திறன்களை எதிர்பார்க் கின்றனர். எண்ணங்கள் வளர்ந் தால் தான் நாடு வளரும் என்ற அப்துல் கலாமின்  சிந்தனையை மனதில் கொண்டு படித்தால் நம் நாட்டை வல்லரசாக்க முடியும். எதிர்காலத்தில் சமூகத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்யும் மனப் பான்மையை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு படிக்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர் கண்ணன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior