உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

அரிமா சங்கம் சார்பில் இலவச பாட புத்தகம்

கடலூர் : 

             பள்ளிக்கு செல்லும் போது உப்பனாற்றில் படகு கவிழ்ந்ததில் பாதிக் கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம் வழங்கப்பட்டது.
 
            கடலூர் அடுத்த நொச் சிக்காடு மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் கடந்த 27ம் தேதி பூண்டியாங்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு செல்ல சங்கொலிக்குப்பம் உப்பனாற்றில் படகில் சென்றனர். அப்போது படகு கவிழ்ந்தது. அதில் 19 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். அவர் களது புத்தகங்கள், நோட் டுகள் சேதமடைந்தன. இந்த மாணவர்களுக்கு கடலூர் காஸ்மோபாலிடன் அரிமா சங்க  தலைவர்  நித்தியானந்தம் தலைமையில் இலவசமாக புத்தகம், நோட்டு, பேனா வழங்கப்பட்டது. நிகழ்ச் சிக்கு சங்க தலைவர் பாரஸ்மல் ஜெயின்,  துணைத் தலைவர் துளசிதாஸ் முன்னிலை  வகித்தனர். தலைமை ஆசிரியர்  ஸ்ரீதரன் வவேற்றார். அரிமா சங்கம் சார்பில் வழங்கப்பட்ட  இலவச பாட  புத்தகங்களை  முதன்மை கல்வி  அலுவலர் அமுதவள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  வழங்கினார். ஊராட்சி தலைவர்  ரவிசங்கர் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior