திட்டக்குடி :
விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான ஆங்கிலம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஆங்கில மொழி ஆய்வக பயிற்சி இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதன் துவக்க விழாவிற்கு விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மயில்வாகனன் வரவேற் றார். பள்ளி செயலாளர் சிவராமசேது பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி பார்வையிட்டு, ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் 9, 10 வகுப்புகளுக்கு ஒவ்வொரு பள்ளிக் கும் ஆங்கில மொழி ஆய்வக பயன்பாட்டிற்காக குறுந்தகடு வழங்கப்பட்டது. இரு பிரிவுகளாக நடந்த இரண்டு நாள் பயிற்சியில் 80 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக