உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு

சிதம்பரம் : 

             அ.தி.மு.க., கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட அருண்மொழித்தேவனுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
            சிதம்பரம் எம்.எல்.ஏ வும், கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளருமான அருண் மொழித்தேவன், சிதம்பரம் நகர செயலாளர் சுந்தர் ஆகியோர் மீண்டும் அதே பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டனர். 

                        அவர்களுக்கு சிதம்பரம் வண்டிகேட்டில் வரவேற்பு அளிக்கப்பட் டது. அங்குள்ள எம்.ஜி. ஆர்., மற்றும் அண்ணாதுரை சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வடக்கு மெயின் ரோடு, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஊர்வலம் சென்று கட்சி அலுவலகத்தில் முடிந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், சிதம்பரம் சட்டசபை தொகுதி அமைப்பாளர் சுரேஷ்பாபு, செயலாளர் அருள், குமராட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஊராட்சி தலைவர் கணேசன், நகர துணைச் செயலாளர் சண்முகம், நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி ராபர்ட், அவைத்தலைவர் ஏசுராஜ், இளைஞர் பாசறை நகர செயலாளர் பிரகாஷ், ஜெயவேல், சிவராம தீட்சிதர், சுப்ரமணியன், மருதவாணன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior