உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

தொடரும் மோட்டார் ஒயர் திருட்டு : தண்ணீரின்றி விவசாயிகள் கடும் அவதி

திட்டக்குடி : 

             திட்டக்குடி வெலிங் டன் நீர்த்தேக்கத்தில் தண் ணீரில்லாத நிலையில் மின்மோட்டார் காப்பர் ஒயர்களும் திருடப்படுவதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
 
             திட்டக்குடி வெலிங் டன் நீர்த்தேக்கம் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த 24 ஆயிரத்து 59 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வெலிங் டன் நீர்த் தேக்கத்தில் நீர்ப்பிடிப்பு நிறுத்தப் பட்டு, கரை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின் றன. எனவே விவசாய பணிகளுக்காக உடனே மின்இணைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெண்ணாடம் பகுதியிலுள்ள வயல்வெளிகளில் பாசனத்திற்காக பயன்பட்டு வரும் மின்மோட்டார் மற்றும் நீர்மூழ்கி மோட் டார்களில் மின்ஒயர்கள், காப்பர் ஒயர்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. இதனால் ஒயர் மாற்ற முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பர் ஒயர் திருடும் ஆசாமிகளின் கைவரிசை மின்வாரியத் திடமும் தொடர்ந்தது. டிரான்ஸ்பார்மரை கொளுத்தி காப்பர் ஒயரினை திருட முயற்சித்த சம்பவம் நடந்தது. தொடர் திருட்டு சம்பவங்களால் மின்மோட் டார் ஒயர் திருட்டினை தவிர்க்க விவசாயிகள் இரவு நேரங்களில் வயல் களில் உறங்கும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். தொடர்ச்சியாக மின் மோட்டார் ஒயர் திருட் டில் ஈடுபட்டு வரும் மர்ம ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior