உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

சைக்கிள், பைக் மீது பஸ் மோதல் இருவர் பலி; வாலிபர் படுகாயம்

கடலூர் : 

             கடலூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் இறந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
                கடலூர் மஞ்சக் குப்பம் சுதர்சனம் தெருவைச் சேர்ந் தவர் மதிவாணன் (45). அ.தி.மு.க., வார்டு உறுப் பினர். இவரது தம்பி பாலு (35) கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் இரவு காவலர். வில்வநகர் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன் (65). கடலூர் அரசு மருத்துவமனை கம்பவுண்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். முதியவர் சீனுவாசன் நேற்று காலை 11.30 மணிக்கு புதுச் சேரி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கங்கணாங்குப்பம் புதிய பாலம் அருகே சென்றபோது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சீனுவாசன் மீது மோதியது. அதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி எதிரில் மதிவாணன், பாலு ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. விபத்தில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆபத் தான நிலையில் இருந்த பாலு புதுச் சேரி பிம்ஸ் மருத்துவமனையிலும், முதியவர் சீனுவாசன் கடலூர் அரசு மருத் துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். சீனுவாசன் மேல் சிகிச் சைக்காக புதுச் சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior