உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

சாலை அகலப்படுத்த தோண்டிய பள்ளத்தில் குடிநீர் பிடிக்கும் அவலம்

 கிள்ளை: 

                       சிதம்பரம் அருகே வி.வி.எஸ். நகரில் சாலை அகலப்படுத்த தோண்டிய பள்ளம் சரி செய்யாததால் குடிநீர் பைப்லைன் துண்டிக்கப்பட்டதால் பள்ளத்தில் இறங்கி தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. சிதம்பரம் அருகே அ.மண்டபத்தில் இருந்து கிள்ளை பிச்சாவரம் வரை சாலையை அகலப்படுத்தி, வடிகால் கட்டுவதற்காக சாலை அபிவிருத்தி திட்டத் தின் கீழ் 2 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் பணிகள் துவங்கியது. பணிகளை விரைந்து முடிக்காததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதுடன் சாலையை அகலப்படுத்த தோண்டிய பள்ளத்தில் வி.வி. எஸ். நகரில் இருந்த பைப் லைன் உடைந்தது. இதனால் தண்ணீர் பிடிக்க முடியாத நிலையால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பள்ளத் தில் இறங்கி தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட் டுள்ளது. எனவே விரைவில் சாலையை சரி செய்வதுடன் குடிநீர் பிடிக்கும் வகையில் குழாய் அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


downlaod this page as pdf

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior