உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

மின்கம்பங்களை அகற்றாமல் சாலை அகலப்படுத்தும் பணி


விருத்தாசலம்: 

                      விருத்தாசலத்தில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் இடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் பாலக்கரை மற்றும் கடைவீதி போக்குவரத்தின் முக்கிய சந்திப்பாக உள் ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் இடப்பற்றாக்குறை காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க நெடுஞ்சாலை துறையினர் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

                          கடைவீதி சந்திப்பில் தென்கோட்டை வீதியில் சாலை ஓரங்களில் இருக்கும் மின் கம்பங்களை அகற்றி ஓரத்தில் அமைக்காமல் சாலை அகலப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர். இதனால் சாலையை அகலப்படுத்தினாலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே அதிகாரிகள் பணி நடைபெறும் இடங்களில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஓரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior