உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரண உதவி

 கடலூர்: 

                        சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்ணுக்கு முதல் வர் நிவாரண உதவியை கலெக்டர் வழங்கினார். சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற திருமணமாகாத பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தில் தாழங்குடாவைச் சேர்ந்த தாயை இழந்த சுகந்திக்கு இயற்கை சீற்ற நிவாரண நிதியிலிருந்து 69 ஆயிரத்து 123 ரூபாயும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 69 ஆயிரத்து 123 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 246 ரூபாயை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். தற்போது சுகந்தி பதிவு திருமணம் செய்துகொண்டு சான்றிதழ் சமர்ப்பித்ததையடுத்து இந்த உதவித்தொகை அவருக்கு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior