உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

தி.மு.க., பிரமுகரை தாக்கி பணம் கொள்ளை: பண்ருட்டியில் மர்ம நபர்கள் கைவரிசை


பண்ருட்டி: 

                    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தி.மு.க., பிரமுகர் மீது மிளகாய் பொடி தூவி தாக்கி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

                   பண்ருட்டி அடுத்த கீழிருப்பைச் சேர்ந்த தி.மு.க., கிளைக் கழக செயலர் பாலமுருகன் (45). இவரிடம் புதுப்பேட்டை ராஜேந்திரன் பணம் கடன் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பித் தராததால் பாலமுருகன் கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு பாலமுருகனுக்கு சாதகமாக இருந்தும் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து மூலம் பேசி ஒரு லட்சத்து 65 ரூபாயை ராஜேந்திரனிடம் இருந்து பாலமுருகன் பெற்றார். பணத்துடன் மாலை 3.30 மணிக்கு கீழிருப்பு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாளிகம் பட்டு - கிழிருப் புக்கிடையே உள்ள பிரமினார் கோவில் அருகில் வந்தபோது முந்திரி தோப் பில் மறைந் திருந்த மர்ம நபர்கள் பாலமுருகன் மீது மிளகாய் பொடி தூவி கொலை செய்யும் நோக்கத் தோடு தாக்கி கழுத்தை நெரித்தனர். சுயநினைவிழந்த பாலமுருகனிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து தப்பியோடினர். பலத்த காயத்துடன் விழுந்து கிடந்த பாலமுருகனை அவ்வழியாக சென்ற லாரி டிரைவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பாலமுருகன் கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து பாலமுருகனை தாக்கி வழிபறி கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.


downlaod this page as pdf

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior