உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

'ஹவாலா' பணம் விவகாரம் அமலாக்க பிரிவு விசாரணை


கடலூர்: 

             கடலூரில் கைப்பற்றிய 'ஹவாலா' பணம் குறித்து மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

                   கடலூர் பஸ் நிலையத்தில் 2ம் தேதி இரவு 9 மணிக்கு திருப்பாதிரிபுலியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 42 லட்சம் ரூபாய் 'ஹவாலா' பணம் பிடிபட்டது. நாகை மாவட்டம் திட்டச்சேரி அல்பைசல் (32), திண்டுக்கல் மாவட்டம் அஷ்ரப் அலி (54), சென்னை ஜார்ஜ் டவுன் ஈஸ்வர் (42), சென்னை திருவல்லிக்கேணி சகுபர் சாதிக் (44), ஜாகீர் (எ) ஜாகீர் உசேன் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பணம் ஒப்படைக்கப்பட்டது. 'ஹவாலா' பணம் கைப்பற்றப்பட்டது குறித்து மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று கடலூரில் விசா ரணை மேற்கொண்டனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior