உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

விவசாயத்தில் சிறந்த பணி உழவர் மன்றத்திற்கு விருது

 குறிஞ்சிப்பாடி: 

                     கடலூர் மாவட்டத்தில் சிறந்த உழவர் மன்றத்திற் கான விருது அயன் குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிர் வகை பயிர்களில் தரமான விதை உற்பத்தி, விவசாயிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கும் விழா நடந்தது. கோவை வேளாண் பல்கலை., இணைவேந்தர் முருகேச பூபதி தலைமை தாங்கினார். தொலைதூர விரிவாக்க கல்வி இயக்குநர் கலைச்செல்வன், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஜெயமணி, பேராசிரியர் சாத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் வேளாண் தொழில் நுட்ப பரவலாக் கல், தொழில் நுட்பங் களை கையாள்வதிலும் அதன் பயன்களை மக்களுக்கு எடுத்து செல்வதில் சிறந்து பணியாற்றிய அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத்திற்கு சிறந்த உழவர் மன்றம் என்ற விருது வழங்கப்படது. விருதை உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் பெற்றுக் கொண்டார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior