உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

சித்திரைப்பட்டத்தில் எள் சாகுபடி: இணை இயக்குனர் வேண்டுகோள்

 கடலூர்: 

                 சித்திரைப்பட்டத்தில் எள் சாகுபடி செய்து பயனடைய விவசாயிகளை இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து வேளாண் இணை இயக்குனர் இளங் கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

                      தமிழகத்தில் 1.16 லட் சம் எக்டரிலும், கடலூர் மாவட்டத்தில் 5,000 எக்டர் பரப்பளவிலும் எள் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி தொழில் நுட்பங்கள் சரியாக கடைபிடிக்காததால் எள் பயிரின் சராசரி மகசூல் குறைவாக உள்ளது. எள் சாகுபடியில் சரியான தொழில் நுட்பங் களை தவறாமல் கடைபிடித்து, சாகுபடி செய்தால், எக்டர் ஒன்றுக்கு சராசரியாக 2,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். எனவே பாசன வசதியுள்ள விவசாயிகள் சித்திரைப்பட்டத்தில் எள் பயிர் சாகுபடி செய்ய கேட்டுக் கொள்கிறேன். சித்திரைப்பட்டத்தில் எள் பயிர் சாகுபடி செய்ய டி.எம்.வி.3. 4, கோ 1, வி.ஆர்.ஐ.1 மற்றும் எஸ்விபிஆர். 1 ஆகிய ரகங்கள் ஏற்றவை. சித்திரைப்பட்ட எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சாகுபடி தொழில் நுட்பங்களை தவறாமல் கடைபிடித்து மகசூல் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior