உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

சேத்தியாத்தோப்பில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்


சேத்தியாத்தோப்பு: 

                   சேத்தியாத்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சக்தி செங்குட்டுவன். இவருக்கு சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் சொந்தமான வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக செங்குட்டுவன் சிதம்பரத்திற்கும் இவரது மனைவியும் வடலூர் சென்றிருந்தனர். செங்குட்டுவன் தாய் மட்டும் வீட்டில் இருந்தார்.

                     இரவு 8 மணிக்கு திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக  வீசியதால் அருகில் இருந்த வேப்பமரம், தென்னை மரத்திலும் தீ பிடித்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 பீரோக்கள், கட்டில், மெத்தை, தானியங்கள், 'டிவி' உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய்  மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior