உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி: 9 சட்டசபை தொகுதிகளில் துவங்கியது

கடலூர்:

                    கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடந்து வருகிறதுவரும் ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. அதன்பேரில் கடலூர் மாவட் டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் 7 லட்சத்து 44 ஆயிரத்து 953 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 15 லட்சத்து 15 ஆயிரத்து 256 வாக்காளர்கள் உள்ளனர். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.

                     இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுச் சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் பிரித்து வீடு வீடாக சென்று பட்டியிலில் உள்ளவர் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கின்றனரா? பெயர் திருத்தம் சரியாக உள்ளது. புதிய வாக்காளர்கள் உள்ளனரா என சரிபார்த்து வருகின்றனர். இந்த பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி முடிந்த பின் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior