உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

மழையால் பாதித்த ரோடுகளை எம்.எல்.ஏ., அய்யப்பன் பார்வை

கடலூர்:

                மழையால் பாதித்த பாதிரிக்குப்பம் கிராம சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறினார்.கடலூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் பல சாலைகள் குண்டும், குழியுமாகின. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டனர்.மழையால் பாதித்த பகுதிகளை எம்.எல்.ஏ., அய்யப்பன் நேற்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி, ஒன்றிய கவுன்சிலர் செல்வக்குமார், ஊராட்சி தலைவர் கோமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ., கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior