உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

மங்களூர் ஒன்றிய அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்தாய்வு


சிறுபாக்கம்:

                  மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத் தில் மழையால் பாதிப்படைந்த சாலைகளை விரைந்து புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. மங்களூர் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் துணை சேர்மன் சின்னசாமி தலைமையில் நடந்தது. ஆணையர்கள் திருமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.

                   கூட்டத்தில் தொடர்மழையால் சேமடைந்த சாலை, தொற்று நோய்கள் குறித்து கலந்தாய்வு நடந்தது.அதிகளவு பழுதடைந்த ஜா.ஏந்தல்- அசகளத்தூர் சாலை, நாவலூர்- நிதிநத் தம் சாலை, பாசார்- விநாயகநந்தல் ஓடை தரைப்பாலம் ஆகியவற்றினை புதுப்பித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் பொறியாளர் மணிவேல், மேலா ளர் கண்ணன், விரிவாக்க அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், நக்கீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior