உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

பணியில் இறந்த உதவியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி


திட்டக்குடி:

               பணியின் போது இறந்த கிராம உதவியாளர் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.திட்டக்குடி தாலுகாவில், பெண்ணாடம் கிராம உதவியாளராக பணியாற்றிய ராஜேந்திரன் கடந்த மாதம் 14ம் தேதி இறந்தார். இவரது குடும்பத்திற்கு சேர வேண்டிய குடும்ப நல நிதியான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று முன்தினம் தாசில்தார் ஜெயராமன் வழங்கினார். அதனை அவரது மனைவி பத்மாவதி பெற்றுக் கொண்டார்.வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., மதிவாணன், கிராம உதவியாளர் கந்தசாமி உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior