உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

பதிவு செய்யாத உவர் நீர் இறால் பண்ணை :உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கடலூர்:
         
               பதிவு செய்யாத உவர் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் இறால் களை இனி ஏற்றுமதியா ளர்கள் வாங்க மாட் டார் கள் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                     மாவட்டத்தில் பட்டா நிலங்களில் உவர்நீர் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப் புச் சட்டம் 2005ன்படி உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத பண்ணைகளின் உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் சிதம்பரத்தில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குநர், நீர்வாழ் உயிரின வளர்ப்பு அலுவலத்தில் உரிய விண் ணப்பத்தை பெற்று பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

                  தவறினால், 2005ம் ஆண்டு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்புச் சட் டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வாய்ப்புள்ளது.பதிவு செய்யாமல் உற்பத்தி செய்யப்படும் உவர் நீர் இறால்கள் இனிமேல் ஏற்றுமதியாளர்கள் வாங்க மாட்டார்கள். மேலும், மத்திய,மாநில அரசுகள் வழங்கும் மானிய உதவியும் நிறுத் தப்படும். எனவே உடன் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் உவர்நீர் இறால் பண்ணைகளை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior