உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

போனசை உயர்த்தி வழங்க வேண்டும்:அமைச்சு பணியாளர் சங்கம் கோரிக்கை

கடலூர்:

               பொங்கல் போனசை உயர்த்தி வழங்க வேண் டும் என அமைச்சு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து மருத்துவத்துறை அமைச்சுப் பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்க (ஜாஸ்மின்ஸ்) மாநிலத் தலைவர் சிங்காரம் விடுத்துள்ள அறிக்கை:மத்திய அரசு வழங்குவதுபோல், மாநில அரசு பணியாளர்களுக்கு போனஸ் உச்ச வரம்பை உயர்த்தி வழங்க வேண் டும். மேலும் ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும்.

                       மேலும், பண்டிகை முன்பணமாக 10 ஆயிரமாக வழங்க வேண்டும். மருத்துவதுறையில் காலியாக உள்ள 1500 பணியிடங்களை தேர்வாணையம் மூலம் உடன் நிரப்ப வேண்டும். தற்காலிக இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி வயது மூப் பினை கருத்தில் கொண்டு உடன் பணி நிரந் தரம் செய்ய வேண்டும். வருமானவரி உச்சவரம்பை 3.5 லட்சமாக உயர்த்த வேண் டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior