உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

கடலூர்:

               அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 5 நாள் நடந்த முகாமில் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி உயர்நிலைப் பள்ளிகளிலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 240 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 14ம் தேதி அந்தந்த ஒன்றியங்களில் பயிற்சி துவங்கியது.நிறைவு நாளான்று பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்த நிறைவு வகுப்பில் சி.இ.ஓ., அமுதவள்ளி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் நடராஜன் ஆகியோர் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior