உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

நிர்வாகிகள் தேர்வு

கடலூர்:

               தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட் டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அலுவலர் கள், ஊராட்சி உதவியாளர்கள் சங்கம் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் சங்கம் என இரு சங்கங் களாக செயல் பட்டு வந்தனர். இரு சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் வடலூரில் நடந்தது. அய்யாதுரை தலைமை தாங்கினார்.கூட்டத்தில் இரு சங் கங்களும் "தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பாக செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.

                அதன்படி ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் கவுரவத் தலைவராக மதிவாணன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டத் தலைவராக அய்யாதுரை, செயலாளராக பூபதி, தலைமைச் செயலாளராக முருகன், அமைப்பாளராக இளங் கோவன், பொருளாளராக தங்கதுரை, ஆலோசகராக ராஜரத்தினம், துணைத் தலைவர்களாக சங்கர், ராமலிங்கம், துணைச் செயலாளராக மதியழகன், முரளி, மாவட்ட அமைப்புச் செயலாளர்களாக சரவணன், மாயவன், அனில் கான், பிரசார செயலாளராக அம்சவேல் தேர்வு செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior