உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்

ஸ்ரீமுஷ்ணம் :

                      ஸ்ரீமுஷ்ணத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

                   ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் சாலையில் கடைவீதியில் ராஜேந்திரன் (42) என்பவரது வீடும், கடையும் உள்ளது. நேற்று காலை ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு குழந்தையை பள்ளிக் கூடத்திற்கு அழைத்து சென்றார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரையில் தீப்பிடித்து தீ மளமளவென பரவியது. இதில் வீட்டில் இருந்த சாமான்கள் மற்றும் வீட்டுக்கு அருகில் இருந்த புதிதாக துவங்க இருந்து ஆப்செட் பிரஸ் மிஷின் மற்றும் டீக்கடையில் இருந்த சாமான்கள் உள்பட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior