உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

போபாலில் தேசிய பைக்கா கால்பந்து போட்டி : தமிழகம் சார்பில் புதுக்கோட்டை அணி தேர்வு

கடலூர் :

                      மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேசிய பைக்கா விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணிக்கான போட்டி தேர்வில் கால் பந்து மற்றும் மேசைப் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது.மத்திய அரசின் பைக்கா திட்டத்தின் கீழ் 2009-2010ம் ஆண்டிற்கான 2வது தேசிய அளவிலான குரூப் 2 விளையாட்டு போட்டிகள் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மத்தியபிரதேசம் போபாலில் நடக்கிறது.

                          இதில் கால்பந்து, மேசைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகள் இடம் பெறுகின்றன.இதில் பங்கேற்கவுள்ள தமிழக அணிக்கான தேர்வு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது. அதில் கால் பந்து போட்டியில் 27 ஆண் கள் அணிகளும், பெண்கள் பிரிவில் 22 அணிகளும், மேசைப்பந்து போட்டியில் தலா 22 அணிகள் பங்கேற்றன.நேற்று நடந்த இறுதி போட்டியில் கால்பந்தில் ஆண்கள் பிரிவில் புதுக் கோட்டையும், பெண்கள் பிரிவில் சேலமும், மேசைப்பந்தில் ஆண்கள் பிரிவில் சேலமும், பெண் கள் பிரிவில் மதுரை அணிகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு அகில இந்திய கால் பந்து சங்க அமைப்பாளர் ரேணுகாலட்சுமி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் செயலாளர் ஞானப்பிரகாசம், மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior