உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

மணல் ஏற்றி செல்லும் லாரிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

திட்டக்குடி :

                  விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் மணல் ஏற்றி செல்லும் லாரிகளிலிருந்து சிதறும் மணல் குவியலால் விபத்து அபாயம் ஏற்பட் டுள்ளது. விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த வதிஷ் டபுரம், நெய்வாசல், இறையூர் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மணல் குவாரிகளில் டயர் வண்டிகள் மட்டுமே மணல் ஏற்ற அனுமதிக்கப் படுகின்றன. பெண்ணாடம் அடுத்த சிலுப்பனூர் மணல் குவாரியில் லாரிகள், டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்கின்றன. இவ்வாறு செல்லும் லாரிகள் மணலை மூடாமல் செல்வதால் சாலை முழுவதும் மணல் சிதறுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் விழுந்து, விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தடுத்திட மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதனை முறையாக கட்டிச் செல்லவும், சாலைகளில் குவிந்துள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior