உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

கெடிலம் ஆற்றில் மேம்பாலம் கட்ட கலெக்டரிடம் மனு

கடலூர் :
                      திருமானிக்குழி கெடிலம் ஆற்றில் மேம்பாலம் கட்டித் தரக்கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித் துள்ளனர்.

              இதுகுறித்து திருமானிக்குழி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

                      கடலூர் ஒன்றியம் திருமானிக்குழி கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். ஆற்றில் 35 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு மழை, வெள்ளத்தின் போது பாலம் உடைந்தது. பாலம் சரி செய்யப்படாத நிலை உள்ளது.

                       இந்த பாலத்தின் வழியாக திருமானிக் குழி, தி.புதுப்பாளையம், குச்சிப் பாளை யம், ஓட்டேரி, வண்டிக்குப்பம், காட்டுப் பாளையம், சாத்தங்குப் பம், எஸ்.புதூர், வெள்ளக்கரை, ராமாபுரம், கீரப் பாளை யம், கொடுக்கன் பாளையம், அரசடிக் குப்பம், புதுக்குப்பம், ஒதியடிக்குப்பம், கங்கணாங்குப்பம், வடக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், குறவன் பாளையம், மாதாகோவில், குமளங்குளம் உள்ளிட்ட அனைத்து கிராமத்தினரும் பாதிப்பிற் குள்ளாகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், கரும்பு டிராக்டர் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என அனைவரும் அந்த வழியை பயன்படுத்துவதால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளோம். எனவே ஆற்றை கடக்க மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior