உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

கடலூர் :

              மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

புவனகிரி:

               காமாட்சியம்மன் கோவில் தெரு ரேஷன் கடையில் இலவச, வேட்டி சேலை வழங்கும் பணியை பேரூராட்சி சேர்மன் அஞ்சலைதேவி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., ராமலிங்கம், தாசில்தார் காமராஜ், மண்டல துணை தாசில்தார் சுப்ரமணியன், கவுன்சிலர் புஷ்பரேகா பங்கேற்றனர். சி.என்.பாளையம்: ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கந்தசாமி, ஊராட்சி துணை தலைவர் ராஜமாணிக்கம், வி.ஏ.ஓ.,ஜோதிமணி,மக்கள் நலப்பணியாளர் வேல்முருகன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior