உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

அணைக்கரை பாலத்தை விரைந்து கட்ட கோரிக்கை

சிதம்பரம் :

                  அணைக்கரை கொள்ளிடம் பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண் டும் என அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி அரசுக்கு கோரிக்கை வைத் துள்ளது.

                  அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கடலூர் தெற்கு மாவட்ட செயற் குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ராஜா வரவேற்றர். வடக்கு மாவட்ட தலைவர் செங்கல்ராவ்,என்.எல்.சி., அம்பேத்கர் தொழிற்சங்க தலைவர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தனர்.

                       மாநில தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ், மாநில துணை பொது செயலாளர் நவநீதம், புதுச்சேரி மாநில தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ரத்தினராமன் பேசினர்.கூட்டத்தில், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும், புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும், அணைக் கரை கொள்ளிடம் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்துவது, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாளை (6ம் தேதி) சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

                        கூட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்ட புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தலைவராக ராஜன், செயலாளராக ஸ்டாலின்ராஜா, நிதி செயலாளர் மனோகரன், துணைத் தலைவர் ரத்தினராமன், இணை செயலாளர் சிவக்குமார், துணை செயலாளர் சந்தோஷ்குமார், மகளிரணி தலைவியாக கவிதா, செயலாளராக சாவித்ரி உள்ளிட்டோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். பாஸ் கரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior