உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

சாலை பாதுகாப்பு வார விழா கண் பரிசோதனை முகாம்

கடலூர் : 

                  சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நேற்று கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, பண் ருட்டி ஜெம்ஸ் லயன் சங் கம் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுதாகர், வேலுமணி, கோகுலகிருஷ்ணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். அரவிந்த கண் மருத்துவமனை டாக்டர் சஞ்சீவினி தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டவர்களின் கண்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior