உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

நிதி பற்றாக்குறையால் தள்ளாடுது கடலூர் நகராட்சி நிர்வாகம்

கடலூர் :
                       கடலூர் நகராட்சி நிதி பற்றாக்குறை காரணமாக ஊழியர்களுக்கு சம் பளம் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் நகராட்சிகள் உள்ளன. அவற்றில் கடலூர் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாதந்தோறும் ஊழியர்களுக்கு சம்பளம், வளர்ச்சிப் பணிகள் செய்ய போதிய வருவாய் கிடைப்பதில்லை. அரசு மக்களுக்காக இலவசங்கள் வழங்கி வருவதால் அதற்காக பெருமளவு தொகை தேவைப்படுகிறது.

                அதனால் நகராட்சிகளுக்கு வழங்கக்கூடிய பொது நிதியும் போதுமானதாக இல்லை. இந்நிலையில் அண்மையில் அரசு அறிவித்த சம்பள உயர்வின் காரணமாக அனைத்து ஊழியர்களுக்கும் பெரிய அளவுக்கு நிதி தேவைப்பட்டது. அத்துடன் மாதந்தோறும் ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கே குறைந்தபட்சம் 30 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இதனால் நகராட்சியால் எந்த வளர்ச்சி திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் தள்ளாட்டம் கண்டுள்ளது.இதன் உச்சக்கட்டமாக நவம்பர் மாத சம்பளம் டிசம்பர் 2வது வாரத்தில் வழங் கப்பட்டது. டிசம்பர் மாதம் சம்பளம் எப்போது கிடைக்கும் என தெரியாமல் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். இதற்கிடையே சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் முதல்வர் அறிவித்த போனஸ் மட்டுமாவது கிடைக்குமா என நகராட்சி ஊழியர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior