உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

ஊராட்சிகளில் நூலக அறிவுத்திறன் போட்டி

கடலூர் :

                      மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல் படுத்தப்படும் ஊராட்சிகளில் நூலக அறிவுத் திறன் போட்டிகள் நடத்தப் பட்டன.

கீழ்நத்தம்: 
                       மூன்று பிரிவாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர் பாலு, ஊராட்சி துணைத்தலைவர் ராணி, பற்றாளர் ஆறுமுகம் பங்கேற்றனர்.மெய்யத்தூர்: ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வாசுகி, ஆசிரியர்கள் ரத்தினகுமாரி, ஞானமூர்த்தி, பிரபாகரன், பூங்குழலி நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர். ஊராட்சி துணைத் தலைவர் ராஜவள்ளி, உறுப்பினர்கள் லோகநாதன், கதிரவன், தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நத்தம்: ஊராட்சி தலைவர் சுந்தரி தலைமை தாங்கினார்.

                               துணைத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். ஓவியம், பேச்சு, ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் ஜோசப் ஸ்டான்லி, சிவசுப்ரமணி, மேற்பார்வையாளர் சத்தியநாராயணன், அய்யனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பல்லவராயநத்தம்: ஊராட்சி தலைவர் அம்புஜம் தலைமை தாங்கினார். ஐயப்பன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம், மாயவன், கமலக்கண்ணன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.அரசூர்: ஊராட்சி தலைவர் ராணி தலைமை தாங்கினார். நூலகர் உலகநாதன் முன்னிலை வகித் தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா போட்டியை நடத் தினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior