உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

குண்டும், குழியுமான சி.மானம்பாடி சாலை

கிள்ளை :

                சிதம்பரம் அடுத்த சி.மானம்பாடி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிதம்பரம் அடுத்த மேலச்சாவடியில் இருந்து சி.மானம்பாடிவழியாக பொன் னந்திட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சிதம்பரத்தில் இருந்து சி.மானம்பாடி வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் சுற்று வட்டார கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். மேலும், இந்த சாலையை அவசர காலங்களில் பரங் கிப்பேட்டை, பொன்னந்திட்டு மற்றும் முடசலோடை பகுதிக்கு செல்ல குறுக்கு வழியாகவும் பயன்படுத்தி வந்தனர்.

                  தற்போது இந்த சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக கிடப்பதால் கடந்த சில ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து நஞ்சைமகத்து வாழ்க்கையுடன் திரும்பிச் செல்கின்றன. இதனால் காரைக்காட்டுச்சாவடி, சி.மானம்பாடி மற்றும் நெடுஞ்சி கிராம மக்கள் பொன்னந்திட்டு அல்லது நஞ்சைமகத்துவாழ்க்கை வரை நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. மேலும் பொன்னந்திட்டு, பரங்கிப் பேட்டைக்கு செல்ல சாலை வசதி சரியில்லாததால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தினசரி பாதிக்கப்படுகின்றனர். எனவே குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதுப்பித்து தார் சாலை அமைப்பதுடன், தெருவிளக்கும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior