உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

பணி ஓய்வின் போது கவுரவம் : கடலூர் மாவட்ட போலீசார் எதிர்பார்ப்பு

 பண்ருட்டி :
             
                    அரசின் பிற துறைகளில் பணி ஓய்வு பெறுபவர்களை துறை அலுவலர்களால் கவுரவிப்பது போன்று போலீஸ் துறையிலும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட போலீசார் எதிர்பார்க்கின்றனர்.அரசு துறைகளில் பணி புரிந்து ஓய்வு பெறுபவர் களை அந்த அலுவலக சக ஊழியர்களால் பிரிவு உபச் சார விழா நடத்தி, உயர் அதிகாரிகளை கொண்டு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். இந்த சம்பரதாயம் போலீஸ் துறையிலும் வெகு விமர்சியாக நடத்தப்பட்டு வந்தது.

                  ஆனால் இந்த நடைமுறை கடலூர் மாவட்டத்தில் சில ஆண் டாக பின்பற்றப்படவில்லை. அதுவும் ஓய்வு பெறும் போலீசார், அந்த ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை எனில் பிரிவு உபசார விழா நடத்தப்படுவில்லை. இன்றைய காலக் கட்டத்தில் போலீசார் பல இன்னல்களுக்கு இடையே பணி புரிய வேண்டியுள்ளது. அதுவும் மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்காமல் பணிபுரிந்து ஒய்வு பெறுவது கடினமாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், பணி ஓய்வு பெறும் போதுகூட கவுரவிக்கப்படாதது பெரும் குறையாக உள்ளது.இதனைத் தவிர்த்திட மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பணி ஓய்வு பெறும் போலீசாரை அந்த மாதத்தில் ஒரு நாளில் ஓரிடத்தில் அழைத்து கவுரவிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior