உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

கண்தானம்

சிதம்பரம் :

                           சிதம்பரத்தில் இறந்த பெண்ணின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
சிதம்பரம் எல்லையம்மன் கோவில் மடவிளாகத் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி சிங்காரி (55) இறந் தார். அவரது கண் களை தானம் செய்ய அவரது மகன் பெருமாள் முன் வந்தார். அதையடுத்து சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷார் ஜெயின், செயலாளர் விஜயகுமார், மனோகர், முருகப்பன் முன் னின்று ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி டாக்டர் பாரதி உதவியுடன் இறந்தவரின் கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior