உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

இடியும் நிலையில் வேளாண் வங்கி கட்டடம் : புதிய கட்டடம் கட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு

சிறுபாக்கம் :

            சிறுபாக்கம் அருகே பழுதடைந்து காணப்படும் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் கட்டிட கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

                    மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இக்கட்டட வளாகத்தில் ரேஷன் கடையும் இயங்கி வருகின்றது. இங்கு பனையாந்தூர், சித் தேரி, நரையூர், எஸ்.புதூர் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாய கடன்கள், நகை கடன், பயிர்க்கடன் உள் ளிட்ட பல அரசு நலத் திட்டங் களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

              தற்போது கட்டடம் மிகவும் பழுதடைந்து சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் மழைநீர் முற்றிலுமாக உட்புறம் இறங்கி குளம் போல் தேங்கி நிற்பதால் பதிவேடுகள், அலுவலக கோப்புகள், ரேஷன் பொருட்கள் மழைநீரில் நனைந்து சிதையும் நிலை ஏற்படுகின்றது. எனவே கிராம மக்களின் நலன் கருதியும் வங்கியின் கோப்புகளை பராமரிக்கவும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் கட்டித்தர கூட்டுறவு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior