உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

அண்ணாமலை பல்கலையில் 11ம் தேதி வகுப்புகள் துவக்கம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வரும் 11ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும் என, துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
 
துணைவேந்தர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                     சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., - எம்.எஸ்சி., அனைத்து வகுப்புகள், பி.எட்., - எம்.எட்., - பி.மியூசிக்., - எம்.மியூசிக்., - பி.எஸ்சி., விவசாயம் மற்றும் தோட்டக்கலை, டி.பார்ம்., - பி.பார்ம்., - எம்.எஸ்சி., - ஐ.டி., - சாப்ட் வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிக்கேஷன்ஸ், பி.இ., - எம்.இ., அனைத்துப் பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நாளை மறுநாள் (11ம் தேதி) முதல் வகுப்புகள் துவங்கப்படும். பி.இ., முதலாம் ஆண்டு அனைத்து பிரிவிற்கும் வரும் 17ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும். அத்துடன் பி.இ., அனைத்து பிரிவு இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி நடக்கும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior