உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

ஆறுமுக நாவலர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

சிதம்பரம் : 

                  ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியின் 62ம் ஆண்டு இலக்கிய மன்ற விழா நடந்தது.
 
              பள்ளி செயலாளர் டாக்டர் அருள்மொழிச்செல்வன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு லட்சம் ரூபாயில் நவீன கழிவறை கட்டடத்தை  சி.இ.ஓ.,  அமுதவல்லி திறந்து வைத்தார். மாணவர்களுக்கு சுகாதார வளாகத்தை கட்டிக் கொடுத்த சிதம்பரம் ரோட்டரி அறக்கட்டளை மற்றும் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர் கணபதி புதிய நூலகத்தை திறந்து வைத்தார்.  தமிழாசிரியை தமிழ்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் சொக்கலிங்கம் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். உமா மகேஸ்வரி நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கினார்.  செல்வம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior