உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

பள்ளி மாணவர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் விருது

கடலூர் : 

               கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளி சாரணர் மாணவ, மாணவிகள் ஒன்பது பேருக்கு கவர் னர் சுர்ஜித் சிங் பர்னாலா ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கினார்.
 
                கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளியின் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவிகள் பாரதி வாலண் டினா, ரமா பிரியதர்ஷினி, அபிநயா, சாந்தினி, லலிதகுமாரி, நிர்மலா, சிவரஞ்சனி, மாணவர்கள் வரதராஜன், முகமது முனவர் ஆகியோர் ராஜ்ய புரஸ் கார் விருதிற்கு தேர்வு செய்யப் பட்டனர். இவர்களுக்கு கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் சுர்சித் சிங் பர்னாலா ராஜ்ய புரஸ்கார் விருதுகள் வழங்கினார். விருது பெற்ற மாணவ, மாணவிகள், சாரண ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் கலாவதி, சுகுணாவை, தலைமை ஆசிரியர் ராஜயோககுமார், தாளாளர் தாமோதரன் ஆகியோர் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior