உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

வரி வசூலை ரத்து செய்ய வேண்டும் மினிடோர் வேன் நலச்சங்கம் கோரிக்கை

திட்டக்குடி : 

               பெண்ணாடடத்தில் மினிடோர் வேன்களுக்கு விதிக்கப்படும் வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
 
               பெண்ணாடம் மினிடோர் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் நலச்சங்க பேரவை கூட்டம், நகர துணை செயலாளர் ஷாஜகான் தலைமையில் நடந்தது. சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி, வட்ட ஒருங் கிணைப்பாளர் பன் னீர் செல்வம், சி.ஐ.டி.யூ., பழமலை, திட்டக்குடி பணிமனை செயலாளர் சுப்ரமணியன் விளக்கி பேசினர். கூட்டத்தில் பெண்ணாடம் நகரில் மினிடோர் வேன்கள் நிறுத்திட பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும். மினிடோர் வேன்களுக்கு வரிவசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும். பெண்ணாடத்தில் சங்க பெயர் பலகை மற்றும் கொடியேற்று விழா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வில் கவுரவ தலைவராக நீலமேகம், தலைவராக சுரேஷ், செயலாளர் சுப்ரமணியன், பொரு ளாளர் மணிகண்டசெல் வம், துணைத்தலைவர்கள் முருகன், பாண்டு, வெங்கடேசன், துணை செயலாளர்கள் முத்துக்குமார், ஷாஜகான், அன்பரசு உட்பட செயற்குழு உறுப்பினர்கள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ராஜூ நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior