உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

கண்டக்டரை தாக்கி நகை, பணம் கொள்ளை

பரங்கிப்பேட்டை :

                        புதுச்சத்திரம் அருகே தனியார் பஸ் கண்டக் டரை தாக்கிய ஒன்னரை சவரன் செயின், 7 ஆயிரம் ரூபாயை பிடுங்கி சென்ற நான்கு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
 
                          கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு தனியார் பஸ் பயணிகளுடன் சென்றது. பஸ்சில் கீழ்பூவாணிக்குப்பத்தை சேர்ந்த தனசேகரன், பாக்கியராஜ், பாண்டியன், சிலம்பு ஆகியோர் டிக்கெட் எடுக்காமல் வந்தனர். அவர்களிடம், கண்டக்டர் பூபாலன் டிக்கெட் எடுக்க கூறினார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் கீழ்பூவாணிக்கும் வந்ததும் பஸ்சில் இருந்து  இறங்கிக் கொண்டனர். மீண்டும் பஸ் சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும்போது கீழ்பூவாணிக்குப்பம் அருகே தனசேகரன் உள்ளின் நான்கு பேர் பஸ்சை வழிமறித்து கண்டக்டர் பூபாலனை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்னரை சவரன் செயின் மற்றும் 7 ஆயிரம் பணத்தை பிடுங்கி சென்றனர். இதுகுறித்து கண்டக்டர் பூபாலன் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து, தனசேகரன் உள்ளிட்ட நான்கு பேரை தேடிவருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior