உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

வாழைக்கொல்லை கிராமத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

சிதம்பரம் : 

               சிதம்பரம் அருகே வாழைக்கொல்லை வானவில் இளைஞர் நற்பணி மன்றத்தில் நேருயுவகேந்திரா, சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் சார்பில் தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

                 மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை தாங்கினார். மன்ற பொருளாளர் விஸ்வநாதன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் அருட்செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியர் தம்புசாமி, சரவணன், மன்ற நிர்வாகிகள் வீரக்குமார், மணிவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் நடந்த மரக்கன்று நடும் விழா, தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை டி.எஸ் .பி., ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன், சேவைத் தலைவர் சந்திரமோகன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சப் இன்ஸ் பெக்டர் குமார் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior