உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

கடலூர் : 

               வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
 
                கடலூர் வெளிச்செம்மண்டலம் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பாபு(33). புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த 6ம் தேதி பாபு வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் வெளியூருக்குச் சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பாத்திரங்கள் திருடு போயிருந்தது. தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி., பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் இன்ஸ் பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior